கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேள
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி எந்நாளும்தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல் தான் இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது கால் போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி