செங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவிசெங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்கு
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருஹிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஹா..ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராகம் பாடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி