குருவாயூரப்பா குருவாயூரப்பாகுருவாயூரப்பா குருவாயூரப்பாநான் கொண்ட காதலுக்குநீதானே சாட்சிகுருவாயூரப்பா குருவாயூரப்பாவேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்
குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை 
நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன 
வேதமென்ன
நான் போகும் பாதை 
எந்நாளும் உன் பாதை - 2

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு 
நீதானே சாட்சி

தேனாற்றங்கரையில் 
தெய்வீகக்குரலில் 
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

தினந்தோறும் இரவில் 
நடு ஜாமம் வரையில் 
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

அரங்கேற்றந்தான் 
ஆகாமல்தான் 
அலைபாயும் என் ஜீவன்தான்

வா வா என் தேவா 
செம்பூவாய் என் தேகம் 
சேராதோ உன் கைகளிலே
குருவாயூரப்பா.....


ஏகாந்த நினைவும் 
எரிகின்ற நிலவும் 
என் மேல் ஒரு போர் தொடுக்க

எனை வந்துத் தழுவு 
ஏன் இந்தப் பிரிவு 
மானே வா உனை யார் தடுக்க

பரிமாறலாம் 
பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

மாது உன் மீது 
இப்போது என் மோகம் 
பாயாதோ சொல் பூங்குயிலே
குருவாயூரப்பா .....

குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை 
நீதானே பாக்கி

ராதை உனக்குச் சொன்ன 
வேதமென்ன
நான் போகும் பாதை 
எந்நாளும் உன் பாதை

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு 
நீதானே சாட்சி