நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

தாய்மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்

மின்மினி பூவே
உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே
என்னை உன்னில்

தாமதமாய் உன்னை
கண்ட பின்பும்
தாய்மடியாய் வந்தாய்
நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

உன் தேவையை
நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்

உன் காதலை
கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

உன் பாதியும்
என் மீதியும்
ஒன்றேதான் என்று
வாழ்கிறேன்

உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே
செத்து போகிறேன்

சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே
நாளும் வாழலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும்
தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி..