வாசலிலே பூசனிப்பூ வைச்சுபுட்டா வைச்சுபுட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா

வாசலிலே பூசனிப்பூ வைச்சுபுட்டா..வைச்சுபுட்டா..
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா..தச்சுப்புட்டா..
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது

வாசலிலே பூசனிப்பூ வெச்சதென்ன..வெச்சதென்ன..
நேசத்திலே எம்மனச தெச்சதென்ன..தெச்சதென்ன…

பிரிச்சபோதும் பிரியவில்லை சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது..
ஆ…கோலம் போட்டு ஜாடை சொன்னது
கன்னி மானே கோடு நமக்கு யாருப்போட்டது.
நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வெச்சு உள்ளதெல்லாம் கண்டுக்கிட்டேன்
நெத்தியிலே பொட்டு வெச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
நானும் நீயும் ஒன்னா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்

(வாசலிலே பூசனிப்பூ..)

மீண்டும் மீண்டும் கூடிச்சேருது பொன்னியாறு
மோகத்தோடு கூடிப்பாடுது
ஆ..கேட்டு கேட்டு கிறங்க தோனுது ஒங்க பாட்டு
கேள்விப் போல என்ன வாட்டுது
ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசை இது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடி வரும்.
எதோ ஒன்னச்சொல்லி சொல்லி என்னை இப்ப கிள்ளாதே
போதும் போதும் என்னை கண்ணால் கட்டி இழுக்கிற செண்பகமே…

(வாசலிலே பூசனிப்பூ..)