அடி நான் புடிச்ச கிளியேவாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடிநீ கூடு விட்டு வெளியேவந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடிஒண்ணு நீயா திருந்து இல்ல தாரேன்
அடி நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி

கட்டு கட்டா புத்தகத்த சுமக்க வில்ல நானடி
ஆனாலும் தான் கேட்ட வழி போனதில்ல நானடி
வெள்ள மனம் பிள்ள குணம் உள்ள ஆளு நானடி
என்ன பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
உன்னை கண் போலதான் வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

[நான் புடிச்ச கிளியே …]

ஊருக்குள்ளே நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர்வரிச கேட்கவில்ல நானடி
ஆசை பட்ட பாவத்துக்கு அள்ளி தர்பார் ஏனடி
மயக்கம் என்ன பூங்கொடி மாமன் தொள சேரடி
நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்
உன்ன கண் போலதான் வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

[நான் புடிச்ச கிளியே …]