மாலையில் யாரோ மனதோடு பேசமார்கழி வாடை மெதுவாக வீசதேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோமோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோநெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழ
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச 


வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச 
மார்கழி வாடை மெதுவாக வீச 


கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணை பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழுது